Tamil Quran - அல்இன்ஷிகாக் - பிளந்து விடுதல் -அத்தியாயம் : 84-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
84. அல்இன்ஷிகாக்
பிளந்து விடுதல்
மொத்த வசனங்கள் : 25
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
84:1 اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ
84:1. வானம்
507 பிளந்து விடும்போது,
84:2 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۙ
84:2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
84:3 وَاِذَا الْاَرْضُ مُدَّتْؕ
84:3. பூமி நீட்டப்படும்போது,
84:4 وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ
84:4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும்போது,
84:5 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْؕ
84:5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
84:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِۚ
84:6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்.
84:7 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ
84:8 فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ
84:7, 8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.
26
84:9 وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ
84:9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.
84:10 وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ
84:11 فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ
84:10, 11. முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.
26
84:12 وَّيَصْلٰى سَعِيْرًا ؕ
84:12. நரகிலும் கருகுவான்.
84:13 اِنَّهٗ كَانَ فِىْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ
84:13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
84:14 اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ
84:14. "நான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்'' என்று அவன் எண்ணினான்.
84:15 بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًا ؕ
84:15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக
488 இருந்தான்.
84:16 فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ
84:16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
84:17 وَالَّيْلِ وَمَا وَسَقَۙ
84:18 وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ
84:17, 18. இரவின் மீதும், அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!
379
84:19 لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ
84:19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.
84:20 فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَۙ
84:20. அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க என்ன நேர்ந்தது?
84:21 وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ؕ ۩
84:21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும்போது ஸஜ்தாச் செய்வதில்லை.
396
84:22 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۖ
84:22. மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.
84:23 وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَ ۖ
84:23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.
84:24 فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ
84:24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!
84:25 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ
84:25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.