426. பொய்யின் பிறப்பிடம் எது?

 

இந்த வசனத்தில் (96:15) 'குற்றமிழைத்து, பொய் கூறிய முன்நெற்றி' என்று கூறப்பட்டுள்ளது.

 

இது வழக்கத்தில் இல்லாத ஒரு சொற்பிரயோகமாகும். பொய் சொல்வதற்கும், முன்நெற்றிக்கும் என்ன சம்பந்தம்?

 

மனித மூளையின் முன்பகுதியில் பெருமூளை அமைந்துள்ளது. உணர்ச்சி வசப்படுதல், பொய், கோபம், முதலான உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன்புறத்தில் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும், உண்மை பேசுவதற்கும் காரணமாக அமைகின்றது.

 

இந்த உண்மையைத்தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறுகிறது. எனவேதான் 'குற்றமிழைத்து, பொய் கூறிய முன்நெற்றி' என்று இறைவன் கூறுகிறான். குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 50956