247. இப்ராஹீம் நபி, பெற்றோருக்குப் பாவமன்னிப்புத் தேடியது ஏன்?

 

இவ்வசனங்களில் (9:114, 14:41, 19:47, 26:86, 60:4) இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புக் கோரியதாக இறைவன் கூறுகிறான்.

 

இதை முன்மாதிரியாகக் கொண்டு இணைகற்பித்தவர்களுக்கும், இறைவனை அடியோடு நிராகரித்தவர்களுக்கும் பாவமன்னிப்புக் கோரலாம் என்று கருதக் கூடாது.

 

ஏனெனில் 60:4 வசனத்தில் "இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடிய விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களில் தான் அவரிடம் முன்மாதிரி இருக்கிறது'' எனக் கூறப்படுகிறது.

 

9:114 வசனத்தில் "தமது தந்தை இறைவனின் எதிரி என்பதை அறிவதற்கு முன்னால் அவருக்காக இப்ராஹீம் பாவமன்னிப்புத் தேடினார்; தமது தந்தை இறைவனின் எதிரி என்பது தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார்'' எனக் கூறப்படுகிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 43288