116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்

 

எப்போதும் குடி போதையில் இருந்த அன்றைய மக்களுக்கு, மது அருந்துதல் முதலில் தடுக்கப்படாமல் இருந்ததாக 16:67 வசனம் கூறுகிறது.

 

பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின.

 

போதையாக இருக்கும்போது தொழக்கூடாது என்ற கட்டளை ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்டதாக 4:43 வசனம் கூறுகிறது.

 

தொழுகையின்போது போதையாக இருக்கக் கூடாது என்றால் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன் குடிப்பதை நிறுத்த வேண்டும். ஐந்து வேளைத் தொழுகையின்போதும் இவ்வாறு நிறுத்துவதால் குடிப்பழக்கம் பெருமளவு குறைந்தது.

 

பின்னர் குடிக்காமல் இருப்பதே நல்லது என்று 2:219 வசனத்தில் அறிவுரை கூறப்பட்டது.

 

அதன் பின்னர் மது அருந்துவது முழுமையாகத் தடை செய்யப்பட்டதாக 5:90-91 வசனங்கள் கூறுகின்றன.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44813