204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஸகாத்

 

ஸகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிம் அல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் பகைமை பாராட்டாமல் இருக்கிறார்களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம் என்று இவ்வசனம் (9:60) கூறுகிறது.

 

உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது. பகைமை பாராட்டும் முஸ்லிமல்லாதவர்கள் பகைமையைக் கைவிடுவார்கள் என்றால் அத்தகையோருக்கும் ஸகாத் கொடுக்கலாம். 'உள்ளங்கள் ஈர்க்கப்பட' என்பதில் இவர்களும் அடங்குவார்கள்.

 

இஸ்லாத்தின் வணக்க வழிபாட்டில் ஒன்றாக ஸகாத் அமைந்துள்ளது. அப்படி இருந்தும் ஸகாத்தை முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அளிக்கலாம் என்று இஸ்லாம் சட்டமியற்றியுள்ளது. இதற்கு நிகரான ஒரு மனித நேயத்தை உலகில் எந்த மதத்திலும் காண முடியாது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 40761