Tamil Quran தமிழ் குர்ஆன் -அல்கத்ர்- மகத்துவம் -அத்தியாயம் :97-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
97. அல்கத்ர்-
மகத்துவம்
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
97:1 اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ
97:1. மகத்துவமிக்க இரவில்
447 இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
97:2 وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ
97:2. மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
97:3 لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ
97:3. மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
97:4 تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
97:4. வானவர்களும், ரூஹும்
444 அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.
97:5 سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
97:5. ஸலாம்!
159 இது வைகறை வரை இருக்கும்.