Tamil Quran தமிழ் குர்ஆன்-அத்தீன்- அத்தி -அத்தியாயம் :95-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
95. அத்தீன்
அத்தி
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
95:1 وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ
95:1. அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!
379
95:2 وَطُوْرِ سِيْنِيْنَۙ
95:2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!
379
95:3 وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ
95:3. அபயமளிக்கும் இவ்வூர்
34 மீதும் சத்தியமாக!
379
95:4 لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ
95:4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
368
95:5 ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ
95:5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
95:6 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍؕ
95:6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.
95:7 فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ
95:7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை
1 உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?
95:8 اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ
95:8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?