Tamil Quran தமிழ் குர்ஆன் -தப்பத்- அழிந்தது -அத்தியாயம் :111-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
111. தப்பத்
அழிந்தது
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
111:1 تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ
111:1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
111:2 مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ
111:2. அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
111:3 سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ
111:4 وَّامْرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِۚ
111:3, 4. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.
26
111:5 فِىْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ
111:5. அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.
356