Tamil Quran -அல்லுஹா - முற்பகல் -அத்தியாயம் :93-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
 
                    
                    	
  
           
           
    
         
     
		 93.    அல்லுஹா 
           முற்பகல்
           மொத்த வசனங்கள் : 11
         
 
      
	 
	  இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
      
      
         
 
       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
     அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
        
   
 
  
  
 
           
      
           
      
93:1   وَالضُّحٰىۙ 
           93:1. முற்பகல் மீது சத்தியமாக!
379
 
        
                  
               
               
               
    
           
      
           
      
93:2   وَالَّيْلِ اِذَا سَجٰىۙ 
           93:2. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
379
 
        
                  
               
               
               
               
              
           
      
           
      
93:3   مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ 
           93:3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.
        
                  
               
               
               
            
           
      
           
      
93:4   وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ 
           93:4. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
        
                  
               
               
               
 
           
      
           
      
93:5   وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ 
           93:5. (முஹம்மதே!) உமது இறைவன் பிறகு உமக்கு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.
        
                  
               
               
               
    
           
      
           
      
93:6   اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى 
           93:6. உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?
        
                  
               
               
               
            
          
               
              
           
      
           
      
93:7   وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى 
           93:7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.
81
 
        
                  
               
               
               
            
           
      
           
      
93:8   وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ 
           93:8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
        
                  
               
               
               
 
 
           
      
           
      
93:9   فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ 
           93:9. எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!
        
                  
               
               
               
    
           
      
           
      
93:10   وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ 
           93:10. யாசிப்பவரை விரட்டாதீர்!
        
                  
               
               
                 
            
          
            
          
               
              
             
      
           
      
93:11   وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ 
           93:11. உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!