Tamil Quran -அல்லுஹா - முற்பகல் -அத்தியாயம் :93-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
93. அல்லுஹா
முற்பகல்
மொத்த வசனங்கள் : 11
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
93:1 وَالضُّحٰىۙ
93:1. முற்பகல் மீது சத்தியமாக!
379
93:2 وَالَّيْلِ اِذَا سَجٰىۙ
93:2. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
379
93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ
93:3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.
93:4 وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ
93:4. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
93:5 وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ
93:5. (முஹம்மதே!) உமது இறைவன் பிறகு உமக்கு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.
93:6 اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
93:6. உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?
93:7 وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى
93:7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.
81
93:8 وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ
93:8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
93:9 فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ
93:9. எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!
93:10 وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ
93:10. யாசிப்பவரை விரட்டாதீர்!
93:11 وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
93:11. உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!