Tamil Quran -அல்முர்ஸலாத் - அனுப்பப்படும் காற்று! -அத்தியாயம் : 77-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
77. அல்முர்ஸலாத்
அனுப்பப்படும் காற்று!
மொத்த வசனங்கள் : 50
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
77:1 وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ
77:2 فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ
77:1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!
379 &
26
77:3 وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ
77:4 فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ
77:3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!
379 &
26
77:5 فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ
77:6 عُذْرًا اَوْ نُذْرًا ۙ
77:5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!
379 &
26
77:7 اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ؕ
77:7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.
77:8 فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ
77:8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது,
77:9 وَ اِذَا السَّمَآءُ فُرِجَتْۙ
77:9. வானம்
507 பிளக்கப்படும்போது,
77:10 وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ
77:10. மலைகள் சிதறடிக்கப்படும்போது,
77:11 وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْؕ
77:11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும்போது (அது நடந்தேறும்)
77:12 لِاَىِّ يَوْمٍ اُجِّلَتْؕ
77:12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது?
77:13 لِيَوْمِ الْفَصْلِۚ
77:13. தீர்ப்பு நாளுக்காகவே!
77:14 وَمَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الْفَصْلِؕ
77:14. தீர்ப்பு நாள்
1 என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
77:15 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:16 اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَؕ
77:16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
77:17 ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ
77:17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?
77:18 كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ
77:18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.
77:19 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:20 اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍۙ
77:20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?
77:21 فَجَعَلْنٰهُ فِىْ قَرَارٍ مَّكِيْنٍۙ
77:22 اِلٰى قَدَرٍ مَّعْلُوْمٍۙ
77:21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதைப் பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?
26
77:23 فَقَدَرْنَا ۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ
77:23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
77:24 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:25 اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۙ
77:26 اَحْيَآءً وَّاَمْوَاتًا ۙ
77:25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா?
26
77:27 وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ
77:27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்.
248 இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.
77:28 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:29 اِنْطَلِقُوْۤا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۚ
77:30 اِنْطَلِقُوْۤا اِلٰى ظِلٍّ ذِىْ ثَلٰثِ شُعَبٍۙ
77:29, 30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!
26
77:31 لَّا ظَلِيْلٍ وَّلَا يُغْنِىْ مِنَ اللَّهَبِؕ
77:31. அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.
77:32 اِنَّهَا تَرْمِىْ بِشَرَرٍ كَالْقَصْرِۚ
77:32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.
77:33 كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ؕ
77:33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
77:34 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:35 هٰذَا يَوْمُ لَا يَنْطِقُوْنَۙ
77:35. இது அவர்கள் பேச முடியாத நாள்!
1
77:36 وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَـعْتَذِرُوْنَ
77:36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.
77:37 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:38 هٰذَا يَوْمُ الْفَصْلِۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ
77:38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்!
1 உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.
77:39 فَاِنْ كَانَ لَـكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ
77:39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
77:40 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:41 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ
77:41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
77:42 وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَؕ
77:42. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும் இருப்பார்கள்.
77:43 كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓئًا ۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
77:43. "நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!'' (எனக் கூறப்படும்.)
77:44 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ
77:44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
77:45 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:46 كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِيْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ
77:46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.
77:47 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:48 وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ
77:48. ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.
77:49 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
77:49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
77:50 فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ
77:50. இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்?