83.   அல்முதஃப்பிபீன்

அளவு நிறுவையில் குறைவு செய்வோர்

மொத்த வசனங்கள் : 36

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

83:1   وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ‏ 
83:1. அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
83:2   الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَۖ‏ 
83:2. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.
83:3   وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَؕ‏ 
83:3. மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்.
83:4   اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ‏ 
83:5   لِيَوْمٍ عَظِيْمٍۙ‏ 
83:4, 5. மகத்தான நாளில் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?26
83:6   يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَؕ‏ 
83:6. அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்
83:7   كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِىْ سِجِّيْنٍؕ‏ 
83:7. அவ்வாறில்லை! குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில் உள்ளது.
83:8   وَمَاۤ اَدْرٰٮكَ مَا سِجِّيْنٌؕ‏ 
83:8. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
83:9   كِتٰبٌ مَّرْقُوْمٌؕ‏ 
83:9. அது எழுதப்பட்ட ஏடாகும்.
83:10   وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ‏ 
83:10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
83:11   الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِؕ‏ 
83:11. அவர்கள் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதினர்.
83:12   وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏ 
83:12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.
83:13   اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَؕ‏ 
83:13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் "இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான்.
83:14   كَلَّا‌ بَلْ رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏ 
83:14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.
83:15   كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌ؕ‏ 
83:15. அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.21
83:16   ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِؕ‏ 
83:16. பின்னர் அவர்கள் நரகில் கருகுவார்கள்.
83:17   ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَؕ‏ 
83:17. "நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே'' என்று பின்னர் கூறப்படும்.
83:18   كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِىْ عِلِّيِّيْنَؕ‏ 
83:18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில் இருக்கும்.
83:19   وَمَاۤ اَدْرٰٮكَ مَا عِلِّيُّوْنَؕ‏ 
83:19. இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
83:20   كِتٰبٌ مَّرْقُوْمٌۙ‏ 
83:20. அது எழுதப்பட்ட ஏடாகும்.
83:21   يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَؕ‏ 
83:21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.
83:22   اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۙ‏ 
83:22. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
83:23   عَلَى الْاَرَآٮِٕكِ يَنْظُرُوْنَۙ‏ 
83:23. உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
83:24   تَعْرِفُ فِىْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِ‌ۚ‏ 
83:24. அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர்.
83:25   يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ‏ 
83:25. முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள்.
83:26   خِتٰمُهٗ مِسْكٌ ‌ؕ وَفِىْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ‏ 
83:26. அதன் முத்திரை கஸ்தூரியாகும். போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும்.
83:27   وَ مِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ‏ 
83:27. அதன் கலவை தஸ்னீம் எனும் நீராகும்.
83:28   عَيْنًا يَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَؕ‏ 
83:28. அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!
83:29   اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَ  ۖ‏ 
83:29. குற்றம் புரிந்தோர் நம்பிக்கை கொண்டோரைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தனர்.
83:30   وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَ  ۖ‏ 
83:30. அவர்களைக் கடந்து செல்லும்போது கண் சாடையால் கேலி செய்து கொண்டிருந்தனர்.
83:31   وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِيْنَ  ۖ‏ 
83:31. தமது குடும்பத்தாரிடம் செல்லும்போது மகிழ்ச்சியடைந்து சென்றார்கள்.
83:32   وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوْنَۙ‏ 
83:32. (நல்லோரான) அவர்களைக் காணும்போது "இவர்கள் வழிகெட்டவர்கள்'' எனக் கூறினர்.
83:33   وَمَاۤ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۙ‏ 
83:33. இவர்களைக் கண்காணிப்போராக அவர்கள் அனுப்பப்படவில்லை.
83:34   فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ‏ 
83:34. அந்நாளில்1 (ஏகஇறைவனை) மறுப்போரைக் கண்டு நம்பிக்கை கொண்டோர் சிரிப்பார்கள்.
83:35   عَلَى الْاَرَآٮِٕكِۙ يَنْظُرُوْنَؕ‏ 
83:35. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
83:36   هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏ 
83:36. (ஏகஇறைவனை) மறுப்போர் அவர்கள் செய்தவற்றுக்கேற்ப கூலி கொடுக்கப்பட்டார்களா? (எனக் கேட்கப்படும்.)

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44559