1.  அல் பாத்திஹா

தோற்றுவாய்

மொத்த வசனங்கள் : 7

அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87

 

 

 

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1:1   اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
1:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
1:2   الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏ 
1:2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
1:3   مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏ 
1:3. தீர்ப்பு நாளின்1 அதிபதி
1:4   اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏ 
1:4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
1:5   اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ 
1:5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!
1:6,7   صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
1:6,7 அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்களும், பாதை மாறிச் செல்லாதவர்களும் ஆவர்.26

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 47589