79.   அந்நாஸிஆத்

கைப்பற்றுவோர்

மொத்த வசனங்கள் : 46

உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

79:1   وَالنّٰزِعٰتِ غَرْقًا ۙ‏ 
79:1. பலமாகக் கைப்பற்றுவோர்165 (வானவர்கள்) மீது ஆணையாக!
79:2   وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۙ‏ 
79:2. எளிதாகக் கைப்பற்றுவோர்165 மீது ஆணையாக!
79:3   وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۙ‏ 
79:4   فَالسّٰبِقٰتِ سَبْقًا ۙ‏ 
79:5   فَالْمُدَبِّرٰتِ اَمْرًا‌ ۘ‏ 
79:3, 4, 5. நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக!26
79:6   يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۙ‏ 
79:6. அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்துதல் (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!
79:7   تَتْبَعُهَا الرَّادِفَةُ ؕ‏ 
79:7. அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்!
79:8   قُلُوْبٌ يَّوْمَٮِٕذٍ وَّاجِفَةٌ ۙ‏ 
79:8. அந்நாளில் சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும்.
79:9   اَبْصَارُهَا خَاشِعَةٌ‌ ۘ‏ 
79:9. அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும்.
79:10   يَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِى الْحَـافِرَةِ ؕ‏ 
79:10. குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?'' என்று கேட்கின்றனர்.
79:11   ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ‏ 
79:11. மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா?
79:12   قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ‌ ۘ‏ 
79:12. அப்படியானால் அது நட்டத்தை ஏற்படுத்தும் மீளுதல் தான் என்றும் கூறுகின்றனர்.
79:13   فَاِنَّمَا هِىَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۙ‏ 
79:13. அது ஒரே ஒரு சப்தம் தான்!
79:14   فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ؕ‏ 
79:14. உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.
79:15   هَلْ اَتٰٮكَ حَدِيْثُ مُوْسٰى‌ۘ‏ 
79:15. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
79:16   اِذْ نَادٰٮهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى‌ۚ‏ 
79:16. அவரை அவரது இறைவன் 'துவா' எனும் தூய பள்ளத்தாக்கில் அழைத்தான்.
79:17   اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى ۖ‏ 
79:17. "நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்''
79:18   فَقُلْ هَلْ لَّكَ اِلٰٓى اَنْ تَزَكّٰى ۙ‏ 
79:19   وَاَهْدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخْشٰى‌ۚ‏ 
79:18, 19. "நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழிகாட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்! எனக் கூறுவீராக'' (என்று இறைவன் கூறினான்.)
79:20   فَاَرٰٮهُ الْاٰيَةَ الْكُبْرٰى ۖ‏ 
79:20. அவனுக்கு (மூஸா) மிகப் பெரிய சான்றைக் காட்டினார்.
79:21   فَكَذَّبَ وَعَصٰى ۖ‏ 
79:21. அவன் பொய்யெனக் கருதி பாவம் செய்தான்.
79:22   ثُمَّ اَدْبَرَ يَسْعٰىۖ‏ 
79:22. பின்னர் விரைவாகப் பின்வாங்கினான்.
79:23   فَحَشَرَ فَنَادٰىۖ‏ 
79:23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.
79:24   فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰى ۖ‏ 
79:24. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்
79:25   فَاَخَذَهُ اللّٰهُ نَڪَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰى ؕ‏ 
79:25. அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.
79:26   اِنَّ فِىْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ يَّخْشٰىؕ‏ 
79:26. (இறைவனை) அஞ்சுபவருக்கு இதில் படிப்பினை உண்டு.
79:27   ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ‌ ؕ بَنٰٮهَا‏ 
79:27. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா?507 அதை அவன் நிறுவினான்.
79:28   رَفَعَ سَمْكَهَا فَسَوَّٮهَا ۙ‏ 
79:28. அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான்.
79:29   وَ اَغْطَشَ لَيْلَهَا وَاَخْرَجَ ضُحٰٮهَا‏ 
79:29. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.
79:30   وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا ؕ‏ 
79:30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.
79:31   اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰٮهَا‏ 
79:31. அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.
79:32   وَالْجِبَالَ اَرْسٰٮهَا ۙ‏ 
79:32. மலைகளை முளைகளாக நாட்டினான். 248
79:33   مَتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏ 
79:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்க்கை வசதிக்காக (இவற்றை ஏற்படுத்தினான்)
79:34   فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰى ۖ‏ 
79:35   يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ‏ 
79:34, 35. மாபெரும் அமளி ஏற்படும்போது மனிதன் தான் செய்ததைப் பற்றி அந்நாளில் எண்ணிப் பார்ப்பான்.26
79:36   وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِمَنْ يَّرٰى‏ 
79:36. காண்போருக்கு (அருகில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:37   فَاَمَّا مَنْ طَغٰىۙ‏ 
79:38   وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ‏ 
79:39   فَاِنَّ الْجَحِيْمَ هِىَ الْمَاْوٰىؕ‏ 
79:37, 38, 39. யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.26
79:40   وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ‏ 
79:41   فَاِنَّ الْجَـنَّةَ هِىَ الْمَاْوٰىؕ‏ 
79:40, 41. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.26
79:42   يَسْـــَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ‏ 
79:42. (முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.
79:43   فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ‏ 
79:43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?
79:44   اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ‏ 
79:44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.
79:45   اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ يَّخْشٰٮهَاؕ‏ 
79:45. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
79:46   كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰٮهَا‏ 
79:46. அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப்பொழுதோ, அல்லது அதன் காலைப்பொழுதோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 47043